விஷம் குடித்து பெண் தற்கொலை

Update: 2023-07-13 19:00 GMT

நாமக்கல் அருகே உள்ள ரெட்டிபட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் சித்ரா (வயது 47). இவருக்கு பூபேஷ் (25) என்கிற மகனும் கிருத்திகா (15) என்கிற மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சித்ரா விஷம் குடித்துவிட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சித்ரா இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மகன் பூபேஷ் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மகனுக்கு திருமண தடை ஏற்பட்டு வந்ததால் மனம் உடைந்த சித்ரா தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்