விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

வலங்கைமான் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-05-23 21:41 IST

வலங்கைமான்:-

வலங்கைமான் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மகன் அன்பரசன் (வயது36). தொழிலாளி. இவருக்கும் வலங்கைமான் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகள் தீபா (26) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்ப தகராறு காரணமாக தீபா கணவரிடம் கோபித்துக்கொண்டு பெற்றோருடன் வலங்கைமான் அய்யனார் கோவில் தெருவில் கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறார். இந்த நிலையில் மனைவியை பார்க்க அவருடைய வீட்டிற்கு சென்றபோது அன்பரசனுக்கும், தீபா குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அன்பரசன், மனைவியின் வீட்டுக்கு முன்பு கடந்த 20-ந் தேதி பூச்சி மருந்து (விஷம்) குடித்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்பரசனின் தந்தை ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்