தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மாரண்ட‌அள்ளி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-28 18:45 GMT

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் (வயது65). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் கடந்த 15 நாட்களாக சிக்கமாரண்ட‌‌அள்ளி ஊராட்சியில் உள்ள ரைஸ் மில் ஒன்றில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார். நேற்று காலை அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்