விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-01 18:45 GMT

காவேரிப்பட்டணம்:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கொண்டசாமனஅள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 29-ந் தேதி பையூர் அடுத்த ஆரியப்பன் கொட்டாய் பகுதியில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்