தொழிலாளி தற்கொலை

தளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-27 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தளி அருகே உள்ள கோட்டபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராஜப்பா விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜப்பா பரிதாபமாக இறந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்