நாமகிரிப்பேட்டை அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-11-30 18:45 GMT

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி பாலாத்து காடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். விவசாயி. இவருடைய மனைவி சந்தியா (வயது 28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சந்தியா கணவரை விட்டு பிரிந்து காக்காவேரி அருகே உள்ள தாயார் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி சந்தியா வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வலியால் துடித்த அவர் விஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா நேற்று இறந்தார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்