லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-12-02 18:45 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தை அடுத்த தாஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 41). லாரி டிரைவர். இவருடைய மனைவி சத்யா (வயது 38). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் சத்யா கணவரிடம் கோபித்து கொண்டு சேலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.

மனைவி பிரிந்து சென்றதை நினைத்து வருந்திய லட்சுமணன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த பள்ளிபாளையம் போலீசார் லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்