விஷம் குடித்து பெண் தற்கொலை

Update: 2022-12-24 18:45 GMT

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள அஸ்தகிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி முனியம்மாள் (வயது 38). இவர் கடந்த 10 ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முனியம்மாள் கடந்த 17-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முனியம்மாள் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள் நேற்று இறந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்