விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

Update:2023-01-10 00:15 IST

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா கீழ்சாத்தம்பூர் அருகே உள்ள பெருமாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாராயி (வயது 68). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக மனமுடைந்த நிலையில் இருந்த மாராயி விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாராயி இறந்தார். இதுதொடர்பாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்