லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-03-13 19:00 GMT

பர்கூர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மணத்தூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் காசிராஜா (வயது 24). லாரி டிரைவர். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் வேறு ஒருவருக்கும் கந்திகுப்பம் அருகே திருமணம் நடந்தது.

இதனால் வேதனை அடைந்த காசிராஜா கந்திகுப்பம் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் சின்ன மாட்டரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்ன மாட்டரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ரோஷினி கொடுத்த தகவல்பேரில் கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காசிராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்