எருமப்பட்டி அருகேதபால்காரர் விஷம் குடித்து தற்கொலை

Update:2023-04-11 00:08 IST

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63). தபால்காரர். இந்த நிலையில் சண்முகத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சண்முகம் கடந்த 8-ந் தேதி விஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை சண்முகம் இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்