சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி

தாம்பரம்-கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயில் சேவை அரை மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.

Update: 2022-11-23 10:13 GMT

சென்னை,

தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர்ப் பகுதிகளிலிருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் மூலம் சென்னை நகருக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் ரெயில் பாதையில் உயர்மின்அழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாம்பரம் - கடற்கரை இடையேயான ரெயில் சேவை அரை மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.

இதனால் மின்சார ரெயில்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டதால் நேரத்திற்கு பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்