வாகனம் மோதி டாஸ்மாக் ஊழியர் பலி
கயத்தாறு அருகே வாகனம் மோதி டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே சவலாப்பேரி பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 48). இவர் சன்னதுபுதுக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்ததும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அப்போது கரிசல்குளம் அருகே நாற்கர சாலையில் வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பூல்பாண்டி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.