சுதந்திர தினவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவு

சுதந்திர தினவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளாா்.

Update: 2022-08-12 17:59 GMT


கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வருகிற 15 ந்தேதி (திங்கட்கிழமை) சுதந்திர தினம் என்பதால், அன்றைய தினம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக்கூடங்களை மூடவேண்டும். இதை மீறி அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலும், அரசு பார்கள் மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்-3 பார்களில் மதுபானங்கள் விற்றாலோ டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்-3 உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்