மொபட் கவிழ்ந்து இளம்பெண் பலி

நெல்லை அருகே மொபட் கவிழ்ந்து இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-02 18:30 GMT

இளம்பெண்

நெல்லை டவுன் மகிழ்வண்ணநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவருடைய மகள் காந்திமதி (வயது 33). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். இந்த நிலையில் காந்திமதி பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் சென்றார். பின்னர் அங்கிருந்து மொபட்டில் நெல்லை நோக்கி சீதபற்பநல்லூர் அருகே உகந்தான்பட்டி விலக்கு பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.

பலி

அந்த பகுதியில் 4 வழிச்சாலை வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அந்த ரோட்டில் வந்து கொண்டிருந்த காந்திமதி எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மொபட்டுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காந்திமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்