கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

நாங்குநேரி அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-02 19:32 GMT

நாங்குநேரி:

பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் சூரிய பாலா (வயது 20). இவர் சென்னையில் லாரி கிளீனராக இருந்து வருகிறார். தற்போது ஊருக்கு வந்திருந்த அவர் நாங்குநேரியை அடுத்த பட்டர்புரம் அருகே சென்றபோது போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 1.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்