கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

வேலூர் சேண்பாக்கத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-11 11:29 GMT

வேலூர் சேண்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வடக்கு போலீஸ் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சேண்பாக்கம் நேதாஜி ரோட்டில் நின்றிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த பொன்னம்பலம் மகன் உபேந்திரன் (வயது 23) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் உபேந்திரனை கைது செய்து, அவரிடம் இருந்து 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்