மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

வள்ளியூரில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-06-10 01:31 IST

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் கேசவநேரி சந்திப்பு பகுதியில் வள்ளியூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது 50 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கஞ்சாவை கடத்தி சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பழவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்