பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வாலிபர் கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வாலிபர் கைது;

Update:2023-03-08 00:15 IST

கோவை

கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

பெட்ரோல் குண்டு வீச்சு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்து மத்திய உள்துறை சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இதனை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கோவைப்புதூரில் கடந்த செப்டம்பர் மாதம் ஆனந்த கல்யாணராமன் என்பவரது வீட்டு முன்பும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவி கமிஷனர் ரகுபதி ராஜா, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல்வேட்டை நடத்தி வந்தனர்.

வாலிபர் கைது

இந்த வழக்கில் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த முகமது ஷபி (வயது 29) என்பவரை குனியமுத்தூர், செல்வம் நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "முகமது ஷபி, அடிக்கடி வீட்டை மாற்றிக்கொண்டு தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளவரா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. மற்ற அமைப்புகளில் உறுப்பினராக இல்லை. ஆனால் ஆதரவாக செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்தனர்.

கைதான முகமது ஷபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்