விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விருத்தாசலம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-09-30 00:15 IST

விருத்தாசலம்

விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு மகன் ராஜாமணி (வயது 34). இவரது மனைவி சரண்யா (27). ராஜாமணி இரண்டு வருடங்களாக சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். தொடா்ந்து அவர் தினசரி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை சரண்யாவின் பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜாமணி சம்பவத்தன்று வீட்டில் இருந்த விவசாய நிலத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துவிட்டார். இதைபார்த்த அவரது குடும்பத்தினர் ராஜாமணியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்