வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-12-19 20:39 GMT

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன்பாகத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது58). இவரது மகன் ஜெனிஷ் (23). இவர் டிப்ளமோ படித்துவிட்டு கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அடிக்கடி மது போதையில் வீட்டில் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று நாராயணன் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் ஜெனிஷ் மட்டும் தனியாக இருந்தார். நாராயணன் திரும்பி வந்த போது ஜெனிஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஜெனிஷ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்