வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கோத்தகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே பர்ன்சைடு கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 24). இவர் தேயிலை தொழிற்சாலையில் டீ மேக்கராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்று வீடு திரும்பிய அவர் சாப்பிட்டு விட்டு 9.30 மணிக்கு தூங்க சென்றுள்ளார். காலை 6.30 மணிக்கு மணிகண்டனை எழுப்புவதற்காக அவரது தாயார் சென்று பார்த்த போது, மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.