வாலிபர் தூக்குப்போட்டு சாவு

சிவகிரியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-12 21:58 GMT

சிவகிரி:

சிவகிரி வடக்கு ரதவீதி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் கனியப்பன். இவருடைய மகன் முருகன் (வயது 20). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவும், சற்று மனநல பாதிப்பும் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முருகன் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்