கோவில் கும்பாபிஷேகம்
கல்வீட்டு சுடலை மாடசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் கல்வீட்டு சுடலை மாடசாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம், அலங்காரபூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.