நாமகிரிப்பேட்டையில்ரூ.3 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

Update: 2023-02-08 19:00 GMT

ராசிபுரம்:

ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகமான நாமகிரிப்பேட்டையில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. நாமகிரிப்பேட்டை, அரியா கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர்.

இந்த ஏலத்தில் 75 மஞ்சள் மூட்டைகள் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் போனது. விரலி ரகம் 50 மூட்டைகளும், உருண்டை ரகம் 23 மூட்டைகளும், பனங்காலி ரகம் 2 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5,722 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7,332-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5,555-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6,402-க்கும் பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.11,032-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11,635-க்கும் ஏலம் விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்