நாமகிரிப்பேட்டையில்ரூ.1.17 கோடிக்கு மஞ்சள் ஏலம்

Update: 2023-04-19 19:00 GMT

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டை சந்தையில் ரூ.1.17 கோடிக்கு மஞ்சள் ஏலம் போனது.

மஞ்சள் ஏலம்

ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளையான நாமகிரிப்பேட்டையில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. நாமகிரிப்பேட்டை, அரியா கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலத்தில் 2,950 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 17 லட்சத்துக்கு ஏலம் போனது. இதில் விரலி ரகம் 2,100 மூட்டைகளும், உருண்டை ரகம் 760 மூட்டைகளும், பனங்காலி ரகம் 90 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன.

வரத்து அதிகரிப்பு

விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5,302 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7,042-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.4,889-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6139-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 444-க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட ஒப்பிடுகையில் இந்த வாரம் அதிகளவில் மஞ்சள் மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

======

Tags:    

மேலும் செய்திகள்