நாமகிரிப்பேட்டையில் ரூ.80 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

Update: 2023-05-03 19:00 GMT

நாமகிரிப்பேட்டையில் நடந்த ஏலத்தில் ரூ.80 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.

மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. நாமகிரிப்பேட்டை, அரியா கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் 2 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் ரூ.80 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

பனங்காலி ரகம்

இதில் விரலி ரகம் 1,450 மூட்டைகளும், உருண்டை ரகம் 500 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டன. விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5,402 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7,075-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5,069-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6,019-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.2,869-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11,602-க்கும் ஏலம் விடப்பட்டது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்தளவில் மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்