வளர்ச்சி திட்ட பணிகளை உரிய காலத்தில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

வளர்ச்சி திட்ட பணிகளை உரிய காலத்தில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அறிவுறுத்தினார்.

Update: 2022-09-22 18:45 GMT


வளர்ச்சி திட்ட பணிகளை உரிய காலத்தில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு போக்குவரத்து துறை ஆணையர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும்.

வளர்ச்சி திட்ட பணிகள்

வளர்ச்சி திட்ட பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அனைத்து துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ரவீந்திரன், உதவி கலெக்டர்கள் சங்கீதா, கீர்த்தனாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்