தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது

ஏர்வாடி அருகே தொழிலாளியிடம் பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-21 02:16 IST

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி மகன் குமார் (வயது 45). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கோதைசேரி விலக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோதைசேரியை சேர்ந்த சந்தனராஜ் மகன் அருண்குமார் (23) சமுத்திரபாண்டியிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடம் இருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார். இதுபற்றி குமார் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருண்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்