கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

கயத்தாறு அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-09-25 00:15 IST

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள வாகைத்தாவூர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மந்திரம் என்ற ரஞ்சன் (வயது 65). இவர் சம்பவத்தன்று ஊருக்கு தெற்கே தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார், கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கிணற்றில் இறங்கி மந்திரம் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்