கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி முதியவர் பலி
கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி முதியவர் பலியானார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 75). விவசாயி. இவர் கும்மனூர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக சென்றார். அப்போது போது எதிர்பாராதவிதமாக அவர் ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.