ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

Update: 2023-05-25 20:19 GMT

திருமங்கலம்

திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் திருமங்கலம் வழியாக மதுரை நோக்கி சென்றது. இந்த ெரயிலில் 50 வயது மதிக்கத்தக்கவர் பயணம் செய்தார். இந்த ரெயில் திருமங்கலம் அருகே மறவன்குளம் பகுதியில் சென்ற போது ெரயிலுக்குள் இருந்த அந்த நபர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்