மயிலம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மயிலம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.;

Update:2022-07-06 21:55 IST

மயிலம், 

மயிலம் அடுத்த கொல்லியங்குணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மண்ணு மகன் ஏழுமலை (வயது 38). குடிநீர் தொட்டி ஆபரேட்டர். இவர் வி.பரங்கனியில் இருந்து வீட்டுக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். மயிலம் அருகே வந்து கொண்டிருந்தபோது பஸ் படியில் நின்று பயணம் செய்த ஏழுமலை எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்