கோவில் உண்டியலில் திருடியவர் கைது

கோவில் உண்டியலில் திருடியவர் கைது

Update: 2022-07-06 21:29 GMT

இட்டமொழி:

பரப்பாடி அருகே உள்ள ஆனிகுளம் உய்க்காட்டு சுடலை ஆண்டவர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சேவகன்குளத்தைச் சேர்ந்த சுடலை மகன் கண்ணன் (வயது 28) என்பவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவசிலிங்கம் நேற்று கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்