தொழிலாளி பரிதாப சாவு

விருதுநகரில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-03 19:56 GMT


விருதுநகர் பராசக்தி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 66). இவர் இங்குள்ள பருப்பு மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்த நிலையில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முத்துக்குமார் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மனைவி மீனாட்சி செல்வி கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்