பூஜை செய்து பூசணிக்காய் உடைக்க முயன்றவரால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர் பூஜை செய்து பூசணிக்காய் உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-07-18 17:24 GMT

விழுப்புரம்

தர்ணா போராட்டம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நேற்று பச்சை நிறை உடை அணிந்து சாமியார் போல தோற்றமளித்த மர்ம நபர் ஒருவர் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அவர் பூசணிக்காயை வைத்து அதன் மேல் மஞ்சள் பொடியை கொட்டி வெற்றிலைப்பாக்கு வைத்தார். ஏதோ விபரீதம் நிகழப்போவதை உணர்ந்து அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் ஓடி சென்று அந்த மர்ம நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர் விக்கிரவாண்டி அருகே உள்ள அரசலாபுரத்தைச் சேர்ந்த சுப்புராயலு மகன் ரகுராமன் என்பது தெரியவந்தது.

சாராயம் விற்பனை

அவர் கலெக்டரிடம் வழங்குவதற்காக வைத்திருந்த மனுவில், எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். மேலும் கள்ளச்சாராயம், தடை செய்யப்பட்ட புகையிலையை விற்கின்றனர். இவர்கள் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு பினாமியாக உள்ளதால் இவர்கள்மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். இது தொடர்பாக அரசுக்கு நான் புகார் அளித்ததால் என்னை தாக்கியதோடு, என் குடும்பத்தாரையும் தாக்க திட்டம் தீட்டியுள்ளனர். எனவே என்னையும், என் குடும்பத்தாரையும் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் ரகுராமனிடம் பூசணிக்காய் வைத்து என்ன செய்ய இருந்தீர்கள் என கேட்டபோது, பூசணிக்காயை உடைத்தால், ஒரு மனிதனை பலி கொடுப்பதற்கு ஈடாகும். அதனால் பூசணிக்காயை இங்கு உடைக்க கொண்டுவந்தேன். ஆனால் அதற்குள் போலீசார் என்னை அப்புறப்படுத்திவிட்டாா்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்