பூட்டிய வீட்டை உடைத்து ரூ.2½ லட்சம் நகை, பணம் திருட்டு

கண்ணமங்கலம் அருகே பூட்டிய வீட்டை உடைத்து ரூ.2½ லட்சம் நகை, பணத்தை திருடிவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-10-17 18:12 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே பூட்டிய வீட்டை உடைத்து ரூ.2½ லட்சம் நகை, பணத்தை திருடிவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பின் பக்க கதவு உடைப்பு

கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரிதா (வயது 40). இவரது வீடு அம்மாபாளையம் செல்லும் சாலையில் உள்ளது.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு சரிதா தனது வீட்டை பூட்டிவிட்டு சேத்துப்பட்டில் உள்ள அக்காள் வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அவரது சகோதரர் பழனி, சேத்துப்பட்டில் உள்ள சரிதாவுக்கு தகவல் தெரிவித்தார்.

விசாரணை

இதையடுத்து சரிதா, வீட்டுக்கு சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் வரை இருக்கும்.

இது குறித்து கண்ணமங்கலம் போலீசில் சரிதா புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடி விட்டு தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்