இடைத்தரகர்கள் மூலம் என்னை மிரட்டினர்.....ஊரை விட்டு போக சொன்னார்கள்..சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டி

செல்போன் நம்பரை மாற்ற சொன்னார்கள். 3 மாதமாக இடைத்தரகர்கள் பலர் என்னிடம் பேசினார்கள் என அப்பாவு கூறினார்.

Update: 2023-12-02 09:25 GMT

நெல்லை,

பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களை குறி வைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னை மிரட்டின. ஊரை விட்டு எல்லாம் போக சொன்னார்கள், செல்போன் நம்பரை மாற்ற சொன்னார்கள். 3 மாதமாக இடைத்தரகர்கள் பலர் என்னிடம் பேசினார்கள்.

என்னைப்போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கின்றன.

பண பேரம் பேசி படியவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத்துறை எச்சரிக்கிறது. நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என்றேன். என அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்