கோதண்டராமர் கோவிலில் திருமஞ்சனம்

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது.

Update: 2022-09-03 13:46 GMT

வடுவூர்:

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் திருமஞ்சனம் நடைபெற்றது. முன்னதாக ஹயக்ரீவர் சன்னதியின் முன்பு சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக கோதண்டராமரை எழுந்தருள செய்தனர். பின்னர் அனைத்து சாமிகளுக்கும் பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோதண்டராமர் மற்றும் சாமிகள் கண்ணாடி அறையில் எழுந்தருள செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்