திருச்செந்தூர்புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
திருச்செந்தூர் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஆவுடையப்பன் நெல்லை மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய வசந்தராஜ் திருச்செந்தூருக்கு பணி நியமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றார். அவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.