திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி

களக்காடு கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-09-15 00:49 IST

களக்காடு:

களக்காடு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவிலில் நேற்று ஆனந்த நடராஜர் திருவாசக குழு சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை முதல் மாலை வரை ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசக பதிகங்களை பாடி முற்றோதுதல் நடத்தினர். இதில் உலக நன்மை வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்