இன்று மின் நிறுத்தம்

தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-08-01 20:54 GMT

தஞ்சாவூர்;

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:விளார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்டிதம்பட்டு, விளார், உச்சிமாஞ்சோலை, பொட்டுவாச்சாவடி, விளார் வடக்கு தோட்டம், ஸ்டார்நகர், இளம்பரிதிநகர், அரசு ஓட்டுனர்நகர், அரசு அலுவலர் நகர், காளையார்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேலும் மின்தடை தொடர்பாக 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்