குன்னூரில் தண்டவாளம் சீரமைப்பு:நீலகிரி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது

குன்னூாில் மலை ரெயில் தடம்புரண்ட பகுதியில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து நீலகிரி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

Update: 2023-06-09 23:30 GMT

குன்னூர்

குன்னூாில் மலை ரெயில் தடம்புரண்ட பகுதியில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து நீலகிரி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

மலை ரெயில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், குன்னூரில் இருந்து கேத்தி, பெர்ன்ஹில் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பல் சக்கரங்கள் மூலம் மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலை ரெயிலில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர். கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. இதனால் ஜூன் மாதம் இறுதி வரை மலை ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர்.

தடம்புரண்டது

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊட்டியில் இருந்து 2.30 மணிக்கு 174 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட நீலகிரி மலை ரெயில், குன்னூர் ரெயில் நிலையம் சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 3.30 மணி அளவில் மலை ரெயில் புறப்பட்டது.

அப்போது குன்னூரில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்றபோது திடீரென்று கடைசி பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது. இதையடுத்து மலைரெயில் தண்டவாளத்தில் அப்படியே நின்று விட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.

குன்னூாில் மலை ரெயில் தடம்புரண்ட பகுதியில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து நீலகிரி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து மலை ரெயில் இயக்குவதில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளை மலை ரெயிலில் இருந்து இறக்கி பஸ் மூலமாக மேட்டுப்பாளையம் அனுப்பி வைத்தனர். மேலும், தடம் புரண்ட பெட்டியை மீட்கும் பணியில் ரெயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர். தொடர் மழை காரணமாக தண்டவாளம் ஈரமாக இருந்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் தண்டவாளம் சீரமைக்கும் பணிகளில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு பின் தடம் புரண்ட பெட்டியையும், தண்டவாளமும் சீரமைக்கப்பட்டது.

இதையடுத்து மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. அதன்படி நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்ட மலை ெரயில் குன்னூர் வந்தடைந்தது. அதன் பின்னர் ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்