காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்

காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.

Update: 2022-08-07 16:39 GMT

மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதில் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆகவே பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள் அனைவரும் மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குனரிடம் நேரிலோ அல்லது உழவன் செயலியிலோ தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்