ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி கூட்டம்

அரக்கோணத்தில் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி கூட்டம் நடந்தது.;

Update:2023-06-04 23:44 IST

ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் நேற்று மாலை ரெயில் நிலையம் முன்பு ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, பொது செயலாளர் குணசீலன் ஆகியோர் தலைமையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்