லாரி-கார் மோதல்; அரசு வக்கீல் உள்பட 2 பேர் படுகாயம்

லாரி-கார் மோதல்; அரசு வக்கீல் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.;

Update:2022-11-14 00:15 IST

ஆலங்குடி அருகே சிக்கப்பட்டியை சேர்ந்தவர் கன்ராக் என்கிற கணேசன் (வயது 31). அரசு வக்கீல். இவர் நேற்று புதுக்கோட்டை கோர்ட்டுக்கு சென்று விட்டு ஆலங்குடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியும், கணேசன் ஓட்டி வந்த காரும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கணேசன் படுகாயமடைந்தார். இதற்கிடையே அந்த வழியாக கீழக்கரும்பிரான்கோட்டையை சேர்ந்த வடிவேல் மகன் சந்தோஷ் (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் அவரும் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்