கடையநல்லூரில் வ.உ.சி. பிறந்த நாள்

கடையநல்லூரில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-09-06 00:15 IST

கடையநல்லூர்:

கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற அலுவலகத்தில் வ.உ.சி. 152-வது வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் நகர செயலாளர் முருகன், முன்னாள் நகர செயலாளர் கிட்டு ராஜா, நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்திர பிரசாத், சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை செயலாளர் மைதீன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்