இளம்பெண் காரில் கடத்தப்பட்டாரா?

திருக்கோவிலூர் அருகே இளம்பெண் காரில் கடத்தப்பட்டாரா? போலீசார் தீவிர விசாரணை

Update: 2023-02-13 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கொட்டாமேடு வேங்கூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகள் அனிதா(வயது 21). இவர் சம்பவத்தன்று அவரது வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டுக்கு காரில் வந்த மர்ம நபர்கள் அனிதாவை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அனிதாவின் தந்தை நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அனிதாவை தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்