மது அருந்தும் இடமான வாரச்சந்தை

சோளிங்கர் வாரச்சந்தை மது அருந்தும் இடமாக மாறிவிட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-02 18:57 GMT

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் வாரச்சந்தை இயங்கி வருகிறது. இந்த வாரச்ந்தை குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டது. வாரச்சந்தை கடைகளில் இரவில் வரும் மதுபிரியர்கள் மதுபானத்தை குடித்து அங்கேயே காலிப் பாட்டில்களை போட்டு உடைக்கின்றனர்.

வாரச்சந்தையில் இரவில் தகாத செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் தண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்