மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேயர் வழங்கினார்.

Update: 2023-09-20 20:06 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் 55 மாணவ, மாணவிகளுக்கு சிவகாசி நாடார் மகாஜன சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு அறிவொளி ஆண்டவர் தலைமை தாங்கினாா். சிறப்பு அழைப்பாளராக சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சமூக ஆர்வலர் திருத்தங்கல் மணிவேல், வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிபியோ உண்டு உறைவிட பள்ளி இயக்குனர் கோவிந்தன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்